இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 23)!
நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 23) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்கள், இன்று காலை 10:00 மணிக்கு பட்டியலை வெளியிட்டனர்.
* சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, கூட்டணி கட்சிகள் உடனான பேச்சு வார்த்தையை தி.மு.க., நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று ம.தி.மு.க., மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன், தி.மு.க., குழுவினர் பேச்சு நடத்தினர்.
* சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
* வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் கொல்லமங்கலம் பகுதியில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
* டி 20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
* திமுகவினர் வெல்லும் தமிழ்பெண்கள் பிரசாரத்தை வீடு வீடாக இன்று தொடங்குகின்றனர். இந்த பிரசாரத்தை உலக மகளிர் தினமான மாரச் 8ம் தேதி வரை மேற்கொள்ள உள்ளனர்.
வாசகர் கருத்து (2)
silviya - ,
23 பிப்,2026 - 10:06 Report Abuse
உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து விட்டது அதுதான் மனவேதனை அளிக்கிறது 0
0
Premanathan S - Cuddalore,இந்தியா
23 பிப்,2026 - 13:03Report Abuse
யாரு குடியும் முழுகிப்போய் விட வில்லை விலைவாசி ஏறினால் கவலைப்படாதவன் விளையாட்டுக்கு கவலைப்படுகிறார் சினிமா, கிரிக்கெட், அரசியல் பைத்தியம் இதெல்லாம் நாட்டுக்கு கேடு 0
0
Reply
மேலும்
-
ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் வன்முறை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
-
தன்னம்பிக்கையின் துருவ நட்சத்திரம் லுாபா
-
நியூயார்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாத பனிப்புயல் கோரத்தாண்டவம்; அவசரநிலை பிரகடனம்
-
தமிழக அமைச்சரவை கூட்டம்: 46 முதலீடுகளுக்கு ஒப்புதல்
-
அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்பி கேவியட் மனு
-
ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி: யாரும் தப்ப முடியாது என்கிறார் ஹரியானா முதல்வர்
Advertisement
Advertisement