ஜனாதிபதி மாளிகையில் லுட்யன்ஸ் சிலைக்கு பதிலாக ராஜாஜி சிலை!

40

புதுடில்லி:ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டீஷ் கட்டட கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் சிலை மாற்றப்பட்டு அந்த இடத்தில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டுள்ளது.

1947ல் சுதந்திரம் அடைந்த பிறகும், பிரிட்டிஷ் அதிகாரிகளின் சிலைகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்தன. தற்போது இது மாற்றப்பட்டு, இந்திய தலைவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. காலனித்துவத்தை முற்றிலுமாக அழிக்கும் வகையில், அதன் அடையாளங்களை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



அந்த வகையில் ஜனாதிபதி மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) உள்ள பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் சிலை அகற்றப்பட்டு, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த ராஜாஜி சிலையை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.




மோடி பாராட்டு


அந்த மரபை உடைத் தெறியும் வகையில், நம் நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் உருவச்சிலை திறக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்திருந்தார். இன்று சிலை திறப்புக்கு பின் மோடி வெளியிட்ட பதிவில், 'இது காலனித்துவ மனநிலையின் எச்சங்களை அகற்றும் இந்தியாவின் உறுதியை பிரதிபலிக்கும் பாராட்டத்தக்க முயற்சி. ராஜாஜி ஒரு அறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். சிந்தனையாளர். அவரது வாழ்க்கை, நேர்மை, அறிவுக்கூர்மை, தேசத்துக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உள்ளடக்கியதாக இருந்தது' என்று தெரிவித்துள்ளார்.

வருத்தம்


இதற்கிடையே, லுட்யன்ஸ் சிலை அகற்றப்பட்டதற்கு, அவரது கொள்ளுப்பேரனும், எழுத்தாளருமான மேட் ரிட்லி தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

Advertisement