வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 180 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக, நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி தங்கம் விலை, கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 14,420 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் சரிவடைந்து, 1,15,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் பிப்ரவரி 21ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 260 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 180 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (1)
rahul - ,
23 பிப்,2026 - 16:34 Report Abuse
தங்கம் விலை எட்டாத உயரத்திற்கு சென்று விட்டது 0
0
Reply
மேலும்
-
ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் வன்முறை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
-
தன்னம்பிக்கையின் துருவ நட்சத்திரம் லுாபா
-
நியூயார்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாத பனிப்புயல் கோரத்தாண்டவம்; அவசரநிலை பிரகடனம்
-
தமிழக அமைச்சரவை கூட்டம்: 46 முதலீடுகளுக்கு ஒப்புதல்
-
அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்பி கேவியட் மனு
-
ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி: யாரும் தப்ப முடியாது என்கிறார் ஹரியானா முதல்வர்
Advertisement
Advertisement