திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகிறார்: பா.ஜ., ராம சீனிவாசன் பேச்சு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றக்கோரி திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள், பூர்வ குடியினர் விளக்கேற்றி அரோகரா கோஷங்களுடன் கந்த சஷ்டி கவசம் பாடினர்.
பழநி ஆண்டவர் கோயில் முன்பு அப்பகுதியினர் 'தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என வாசகங்கள் எழுதி கலர் கோலமிட்டு, முருகப்பெருமான் படம் வைத்து நுாற்றுக்கு மேற்பட்ட விளக்குகள் ஏற்றினர்.
பின்பு கோயில் முன் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், பொதுமக்கள், பூர்வீக குடியினருடன் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினார். பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு உட்பட திருப்பரங்குன்றத்தில் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி சஷ்டி கவசம் பாடினர்.
பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மண்டல் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
16 கால் மண்டபம் முன்பு ஹிந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் கேசவன், பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் பிரசாந்த், கோட்ட செயலாளர் அரசு பாண்டி, பொதுமக்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாடினர்.
பின்பு ராம சீனிவாசன் பேசியதாவது: இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை தீப துாணில் ஏற்ற வேண்டும் என முயற்சி செய்தும், நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு ஏற்றவிடவில்லை.
நம்ம மலை, நம்ம முருகன், நம்ம கோயில், நம்ம தீபம். ஆனால் நாம் தீபம் ஏற்ற முடியவில்லை. முருகப்பெருமான் எதிரிகளை அழிப்பவர். தீபம் ஏற்றவிடாமல் எதிர்ப்பவர்களை அழிப்பார். தீபம் ஏற்றுபவர்களை எதிர்ப்பவர்களுக்கு முருகப்பெருமான் நல்ல புத்தி கொடுப்பார். தீபத்தை ஏற்றாமல் தடுப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் முருகனுக்கு உகந்த கார்த்திகை சஷ்டி திதி நாளான இன்று சஷ்டி கவசம் பாடுகிறோம். தீபம் ஏற்றுவதற்காக முருகப்பெருமான் காலை பிடித்துக் கொள்வோம். தீபம் ஏற்ற வலியுறுத்துவோம். தீபம் ஏற்றுவதற்கு பிரார்த்தனை ஒன்றுதான் தீர்வு.
போதைப் பொருள் கடத்துபவர்கள், கஞ்சா விற்பவர்களை போலீசார் சுதந்திரமாக நடமாட விடுகின்றனர். ஆனால் தீபம் ஏற்றுபவர்களை கைது செய்கின்றனர். அனைத்தையும் முருகப்பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார். சத்தியத்தின் வழியில் நாம் செல்கிறோம். தீபம் ஏற்ற வலியுறுத்தி இப்பகுதி பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றீர்கள். உங்களுக்கு பாராட்டுக்கள்.
மார்ச் 1ல் மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார் என்றார்.
முருகன் அருள் ,தமிழக மக்களுக்கு நல்ல புத்தியை புகட்டி இந்து மத விரோதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்
தி க கட்சியினரை விட இவருக்கு அதிகமாக முருகன் மீது பக்தி இருக்கும் என்று தோன்றவில்லை!
உரிமைகளை பாதுகாக்க அமைதியாக போராடவேண்டியது அவசியம். அதை தான் மக்கள் செய்கிறார்கள். முத்துராமலிங்க தேவரும், சினிமாவில் தேவர் பெருமானும், MGR அவர்களும் போற்றிய தெய்வம் முருகன். முருக பெருமான் தமிழை சங்கம் வைத்து பாதுகாத்த மதுரையில், மதுரை மக்கள் அவரை விட்டு கொடுக்க கூடாது.
Drug mafia kazhagam may impose 144 again . Better the Prime Minister of Bharat thinks twice before taking such dangerous adventures in dravida mann.
முருகப்பெருமான் கோவில் என்ன, முனீஸ்வரன் கோவிலுக்குக் கூட போகலாம். இந்த தடவை சுவாமி அருணகிரிநாதர் திருப்புகழ் கூடப் பாடலாம். முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிரைகத்திச் சரவண
திமுகவை காங்கிரஸ் கழட்டி விட போகிறது. அப்புறம் திமுக செல்லா காசுதான்...
சிலுவையில் இருந்த முணு ஆணியை காணோமாம் அப்படின்னா மீண்டும் பூமிக்கு வந்துட்டாரா?
முருகன் சொன்னது அளவுக்கு அதிகம் ஆசைப்பட்டவர் நல்லா வாழ்ந்ததாக இல்லை என்று, தேர்தலில் பின்தான் தெரியும், பிரணவ மந்திரத்தை மறந்த பிரம்மனுக்கு குட்டியதா, அல்லது தந்தைக்கு ஒரு மந்திரம் சொன்னதுபோல சொல்லப்போறாரா என்று. ஓம் சரவணபவாய நமஹ,
திருட்டு ஓவியரே.... உனக்கு ECG xray எதுவும் உதவாது
500 நோட்டை அழித்தால் மட்டுமே முருகன் களத்திர்க்கு வருவார்
எங்கள் கொட்டம் அடங்கட்டும் அடங்காது போகட்டும். முருக பெருமான் தீபம் ஏற்ற விடாதவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களையும் அவர்கள் வம்சத்தையும் துடைத்து தூர எறியட்டும்
திரு மோடி அவர்களுக்கு முருகப்பெருமான் ஆசிர்வாதம்.
நல்லதே நடக்கும்.
அப்போ இராமபிரானை நம்பளயா?
விடியலின் அவுஸ்ட்ரேலிய பிரதிநிதி.
மணியன் ஜி, நாங்க காமெடியாக கருத்து போடுவோம், உங்களைப்போல சம்பளத்துக்கு கருத்து போடமாட்டோம்.
இலங்கையில் நடந்த இன அழிப்பு அவருக்கு தெரியாதா என்ன? அது யார் தலைமையில் இங்கே நடந்தது?மேலும்
-
247 முறை வெளிநாடு பயணம், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு; ராகுல் மீது பாய்ந்த மத்திய அமைச்சர்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்
-
சரிந்தது ஒரு சமரசமற்ற சகாப்தம்
-
நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
-
தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்
-
இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்