தொடர்கிறது குண்டுமழை; இன்று 5வது ஆண்டில் உக்ரைன்-ரஷ்யா போர்
கீவ்: ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையேயான போர் மூண்டு 4 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இன்று (பிப்.24) 5வது ஆண்டில் இந்த போர் அடியெடுத்து வைக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடமைகள் உள்ளிட்டவற்றை இழந்து, இடம்பெயர்ந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் முயற்சிகள் தொடர்ந்தாலும் அதற்கான நிரந்தர தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை. கிட்டத்தட்ட இந்த போர் 4வது ஆண்டை நிறைவு செய்து இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;
உக்ரைனை ஆதரிப்பதில் அமெரிக்கா சக்திவாய்ந்த ஒன்றாகவும், அதில் இருந்து பின்வாங்க முடியாத அளவுக்கும் இருக்கிறது. அதிபர் டிரம்ப், உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவை தொடர்ந்து உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கமுடியாது. ரஷ்யா விரும்பும் அனைத்தையும் தரமுடியாது. போருக்கு புடின் என்ற ஒரு நபரே முக்கிய காரணம்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்புகளை ரஷ்யா தன்னகத்தே கைப்பற்றி உள்ளது. நிலப்பரப்புகள் கையகப்படுத்துவதல், அதிகரிக்கும் உயிரிழப்புகள், உள்கட்டமைப்புகள் சேதம் உள்ளிட்டவை உலகநாடுகள் இடையே கவலையையும் ஏற்படுத்தி உள்ளது, குறிப்பிடத்தக்கது.
போருக்கு காரணமே அமெரிக்கவே.மேலும்
-
யாரு ஹீரோ?
-
ஆக்கிரமிப்பு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு
-
பொக்காபுரம் கோவிலுக்கு அரிசி கொண்டு செல்லும் நிகழ்ச்சி
-
ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் வெள்ளி வென்றவருக்கு பாராட்டு
-
ஓடோடம் வயல் பழங்குடியின கிராமத்தில் சிறப்பு முகாம்; பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் உறுதி
-
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை