போதையில் பூச்சி மருந்து குடித்த விவசாயி பலி

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மதுபோதையில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் இந்திரா நகர் சேர்ந்தவர் செந்தில்குமார், 41; விவசாயி. மது பழக்கம் உடையவர். கடந்த 21ம் தேதி மாலை 6.30 மணிக்கு மதுபோதையில் வீட்டிற்கு வந்த செந்தில்குமார் திடீரென வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து குடித்தார்.

உடன் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து செந்தில்குமார் மனைவி சத்தியா கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement