பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

பரமக்குடி: பரமக்குடியில் வ.உ.சி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 38வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நிர்வாகி இருளப்பன் முன்னிலை வகித்தார்.

தாளாளர் மகேஸ்வரன் வரவேற்றார். முதல்வர் சுகன்யா ஆண்டறிக்கை வாசித்தார்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விதார்த், சென்னை லைப் லைன் ஹாஸ்பிடல் குரூப் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் பரிசுகளை வழங்கி பேசினர்.

பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சவரிமுத்து, குமரேசன், முனியாண்டி, ராமகிருஷ்ணன், கண்ணன், பாஸ்கர சேதுபதி, பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Advertisement