உச்சிப்புளி ரயில் நிலைய நடைமேம்பாலம் சேதம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்ற னர்.
ராமேஸ்வரம்--மதுரை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் தினமும் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
ரயில் நிலையத்தின் இரு நடை மேடைகளுக்கு எளிதாக சென்று வர நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் படிக்கட்டுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் பயணிகள் நடை மேம்பாலம் வழியாக செல்வதற்கு பதிலாக தண்டவாளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். நடை மேம்பாலத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்
-
சரிந்தது ஒரு சமரசமற்ற சகாப்தம்
-
நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
-
தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்
-
இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்
-
இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு; தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம் என்கிறது உச்சநீதிமன்றம்
Advertisement
Advertisement