கால பைரவருக்கு அஷ்டமி பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரில் வானவராயன் மன்னரால் கட்டப்பட்ட அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வடக்கு நோக்கி வள்ளி தெய்வாணை சுப்ரமணியர் சன்னதி உள்ளது.

வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட துன்பம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமியையொட்டி நேற்று கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வேத பாராயணம் நடத்தி கால பைரவருக்கு மகா தீபாராதனை காண்பித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement