லஞ்சம் வாங்கி சிக்கிய அதிகாரி வீட்டில் ரூ.4.27 கோடி பறிமுதல்
புவனேஸ்வர்: ஒடிசாவில் லஞ்சம் வாங்கி கைதான சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் 4 கோடியே 27 லட்ச ரூபாயை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சுரங்கத்துறை துணை இயக்குநராக பணியாற்றுபவர் தேபப்பிரதா மொகந்தி. இவர் சுரங்கப் பணிகளை தடையின்றி செய்வதற்கு லைசென்ஸ் வாங்கிய ஒப்பந்ததாரர் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது நேற்று கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரிடம் சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். வீட்டில் பல இடங்களில் கட்டுக்கட்டாக மறைத்துவைத்திருந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், '' மாநில வரலாற்றில் லஞ்ச வழக்கில் அதிகாரி ஒருவரிடம் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். பணம் எண்ணும் பணி தொடர்ந்துநடக்கிறது. இவர் மீது ஏற்கனவே 2009 ல் லஞ்ச வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது'' எனத் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
247 முறை வெளிநாடு பயணம், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு; ராகுல் மீது பாய்ந்த மத்திய அமைச்சர்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்
-
சரிந்தது ஒரு சமரசமற்ற சகாப்தம்
-
நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
-
தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்
-
இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்
Advertisement
Advertisement