'இலவசங்கள் எங்களை வதைக்கும்': தமிழக தொழில் நிறுவனங்கள் அலறல்
சென்னை: 'சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., - அ.தி.மு.க.,வின் இலவச அறிவிப்புகளால், தொழில் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளன.
இது குறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:
ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய், மகளிருக்கு இலவச பஸ் என, பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.
இதற்காக ஏற்படும் செலவுகளை சமாளிக்க, தாழ்வழுத்த பிரிவில் உள்ள சிறு, குறுந்தொழில்களுக்கு, கிலோ வாட்டிற்கு, 35 ரூபாயாக இருந்த மின்சார நிலை கட்டணம், தற்போது 168 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர, காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை என, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, உச்ச நேர மின் கட்டணமாக, யூனிட் மின்சார கட்டணத்துடன் சேர்த்து, 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், சொத்து வரி, மூன்று முதல் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
இவற்றால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் சார்பில், பல்வேறு இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆட்சிக்கு வரும் கட்சி, இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட, மின் கட்டணம், சொத்து வரி போன்றவற்றை மீண்டும் உயர்த்தும்.
அந்த சுமை, தொழில் நிறுவனங்கள் தலையில் தான் விழும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொழில் முனைவோருக்கு மானியமாக கொடுக்கும் போது மட்டும் அதிர்ச்சி வரமாடெங்கிறது.
தூக்கிட்டு உ.பி, ம.பி, குஜராத்துக்கு போயிடுங்க. இலவசமே இல்லியாம்
மத்திய அரசு, மாநில அரசு, தேர்தலின் போது இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும். ஏதோ அவர்கள் வீட்டு பணத்தை கொடுப்பது போல அறிவிப்புகள். மிக மோசமான அரசியல். நாடு உருப்படாது
கஷ்டபட்டு சம்பாதிக்கிறதை வீணடிக்கும் மக்கள். இலவசம் எப்படி சிக்கனமாக செலவு செய்வார்கள். வீண்
WHY Bureaucrats-Officialdoms-CourtJudges are NOT STOPPING these AntiNational AntiDemocracy 90% NotDue VoteBribe Freebies. DERECOGNISE/DISENFRANCHISE All Such Ruling Parties& FreebiesAvailing People UNTIL 100% Recovery. No Mercy
தொழில் நிறுவனங்கள் மட்டுமா? சாமானியனுக்கு வரிகள், விலைவாசி ஏற்றத்தால் முதுகு ஒடிந்துகொண்டிருக்கிறான்
இலவசங்கள் வதைக்குமா? தொழில் நிறுவனங்கள் அலறலா? அதை பற்றி தமிழக அரசுக்கு அக்கறையில்லை முதல்வர் என்ன சொல்லுகின்றாரோ அதை செய்வதுதான் அதிகாரிகளின் வேலை. நாட்டை வழிநடத்துபவனுக்கு போதிய தலைமைத்துவப் பண்பும் நல்ல பொருளாதுறை அறிவும் இருந்தால் அந்த நாடு வளம் பெரும். நல்ல வளர்ச்சியடையும். அப்படி கடைசியாக வந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். ஜெயா அம்மையாரிடம் அந்த பண்புகள் இருந்தன. முதலமைச்சராக இருந்துக் கொண்டு அரசியல்வாதியாக செயல் பட்டார். அவர் செய்த தவறு. அவர் காலத்திலும் நாடு வளர்ச்சியடைய வில்லை. மக்கள்தான் இனிமேல் நல்ல முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்க அலறினா விட்டு விடுவோமா? நாட்டை நிர்மூலம் ஆக்க, நாசமாக்க என்னென்ன உண்டோ? அத்தனையும் செய்வோம். ஏனென்றால், நாங்கள் ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தை கருணாநிதியின் வழியில் வந்தவர்கள், வளர்ப்பில் வந்தவர்கள்.
வழக்குப்போட்டிருக்க வேண்டும் - வெறுமனே கதறுவதால் ஒரு பயனும் இல்லை.
மகன் இறந்தால் என்ன மருமகள் தாலி அறுந்தால் போதும் என நினைக்கும் வக்கிர புத்தி போன்றது தான் இலவசங்கள்.மேலும்
-
காத்திருப்பு போராட்டம்
-
நிழற்குடை சேதம்
-
மாநில கிரிக்கெட் போட்டி: வெண்கலம் வென்று ராமநாதபுரம் வீரர்கள் சாதனை
-
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்; புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி
-
தி.மு.க., கொடியுடன் வந்த காரை மறித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் போலீசாருக்கு 'டிமிக்கி'
-
கடலாடி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை