எண்கள்1 மற்றும் எண்கள்2
10
பெ ங்களூரை சேர்ந்த 'மேக்மோர்' நிறுவனம், ஜெர்மனியை சேர்ந்த 'எம்.டி. ஏர்கிராப்ட்' நிறுவனத்திடம் இருந்து 10 மின்சார பயணியர் விமானங்களை வாங்குவதற்கான விருப்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஒன்பது இருக்கைகள் கொண்ட இந்த மின்சார விமானங்கள், சிறிய ஓடுபாதைகளிலும் இயங்கும். இந்த விமானங்களின் முதற்கட்ட சோதனை ஓட்டம், வரும் 2028ம் ஆண்டிலும், பொதுமக்கள் பயன்பாடு 2030ம் ஆண்டிலும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12
க டந்தாண்டு அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், இந்தியாவின் தனியார் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி 10.10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 12 காலாண்டுகளில் நிறுவனங்கள் அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் மற்றும் மின்சாதனங்களின் சிறப்பான விற்பனையால், உற்பத்தி துறை நிறுவனங்களின் வருவாய் 11.40 சதவீதமும், லாபம் 11.80 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதேபோல, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விற்பனை 8.80 சதவீதமாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
காத்திருப்பு போராட்டம்
-
நிழற்குடை சேதம்
-
மாநில கிரிக்கெட் போட்டி: வெண்கலம் வென்று ராமநாதபுரம் வீரர்கள் சாதனை
-
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்; புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி
-
தி.மு.க., கொடியுடன் வந்த காரை மறித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் போலீசாருக்கு 'டிமிக்கி'
-
கடலாடி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை