பாக்., பதில் தாக்குதல்: ஆப்கனில் 133 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் மற்றும பாகிஸ்தான் இடையிலான மோதல் முற்றியுள்ளது. விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆப்கனில் 133 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தான் நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குவதும், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டு நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 55 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கான் அறிவித்தது. 19 பாகிஸ்தான் ராணுவ செக்போஸ்ட்கள், மற்றும் இரண்டு தளங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தது. ஆனால், ஆனால், இதனை மறுத்த பாகிஸ்தான் 2 அல்லது 3 வீரர்கள் தான் இறந்துள்ளதாகவும், ஆப்கானை சேர்ந்த 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளதாவது; எங்களது பொறுமை எல்லையை கடந்து விட்டது. தற்போது உங்களுக்கும், எங்களுக்கும் இடையில் நடப்பது நேரடி எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆப்கனுக்கு பதிலடியாக அந்நாட்டின் காந்தகார், காபூல் மற்றும் பக்தியா ஆகிய மாகாணங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.இதில் சிில ராணுவ தளங்கள்அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ஆப்கானை சேர்ந்த 133 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தற்கொலைப்படையினர் தயாராக உள்ளதாக ஆப்கானை ஆளும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளும் அமைதி காக்கும்படி சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய தயாராக உள்ளதாக ஈரானும் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து (7)
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
27 பிப்,2026 - 22:07 Report Abuse
வெள்ளிக் கிழமை வந்துவிட்டாலே இந்த ஜிகாதிகளுக்கு ஒரே கிளுகிளுப்பு தான், ஆப்கானுக்கு ஆதரவாக பலுஜிஸ்தானும் பக்கிகள் மீது மிக கடுமையாக தாக்குதல் நடத்த வேண்டும். அங்கு ஜிகாதி கும்பல்கள் அதிகம் உள்ளதால் தைரியமாக கராச்சி, லாகூர், முல்தான், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி போன்ற பகுதிகளில் தாராளமாக குண்டுகள் வீசலாம். ஆமாம் ஆப்கான் மீது அணுகுண்டு வீசுவோம் என ஏன் பாகிஸ்தான் பிலீம் காட்டவில்லை. ஈரானுக்கு அமெரிக்கா முகூர்த்தம் குறித்து கொண்டு இருக்கிறது இவர்கள் ஆப்கான் பாகிஸ்தானுக்கு சமரசம் செய்கிறார்களாம் இந்த ஜிகாதி கும்பல்கள் செய்கிற காமடி அழிசாட்டியம் தாங்க முடியல டா சாமி. எப்படியோ ஜிகாதிகள் ஒழித்து உலகத்தில் அமைதி ஏற்பட்டு நல்லது நடந்தால் சரி. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
27 பிப்,2026 - 17:54 Report Abuse
வணிக விமானங்கள் கிடைக்கும் வரை இஸ்ரேலை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறு ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் மக்களை அறிவுறுத்துகிறது. இதற்கிடையில், சீனா தனது குடிமக்கள் ஈரானை விட்டு விரைவில் வெளியேறுமாறு எச்சரிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது ஏதோ ஒரு பெரிய நிகழ்வு நடக்கும் போல் தெரிகிறது! 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
27 பிப்,2026 - 17:44 Report Abuse
Why is our so called intellectuals are not condemning Pakistan for killing civilians now? Is it not sui for their probaganda/ agenda? 0
0
Reply
visu - tamilnadu,இந்தியா
27 பிப்,2026 - 17:39 Report Abuse
இந்த நேரத்தில் பலுசிஸ்தான் இந்தியா ஆப்கானிஸ்தான் ஒரே நேரத்தில் தாக்கினால் அருமை 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
27 பிப்,2026 - 17:08 Report Abuse
ஒருவர் மற்றவரை அழித்து தீவிரவாதிகள் அனைவரும் இறக்கட்டும். 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
27 பிப்,2026 - 16:56 Report Abuse
வெள்ளிக்கிழமை வந்துட்டாலே ரத்தவெறி பிடித்த காட்டுமிராண்டிகளுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான் என்ஜோய் 0
0
Reply
raja - Cotonou,இந்தியா
27 பிப்,2026 - 16:35 Report Abuse
தீவிரவாதிகளை உற்பத்தி செய்து உலகத்துக்கு ஏற்றுமதி செய்யும் தொழிசாலை பாக்கிஸ் ஐ அழித்தொழியுங்கள்..உலகத்தில் பாதி அமைதி வந்துவிடும் ... 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement