மார்ச் 2, 3ல்  வீடு தேடி  ரேஷன்

ராமநாதபுரம்: தாயுமானவர் திட்டத்தில் மார்ச் 2, 3 தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கு வந்து வழங்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு கூறியிருப்பதாவது:

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கார்டுதார்களின் வீட்டிற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வழங்கப் படுகிறது. இதன்படி மார்ச் 2, 3 தேதிகளில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Advertisement