ராஜஸ்தானில் சொகுசு பஸ்-டிரக் லாரி மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலி

ஜோத்பூர்: ராஜஸ்தானில் தனியார் பஸ்-டிரக் லாரி மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 20 பேருடன் படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் டிரக் லாரி ஒன்றும் சென்று கொண்டிருந்தது.

எதிர்பாராத தருணத்தில் இவ்விரு வாகானங்களும் மோதிக் கொண்டன. இதில் பஸ்சின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் அங்குள்ளவர்களால் மீட்கப்பட்டு, நஹாட்டா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது. அதிவேகமே இந்த விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

நள்ளிரவு அல்லது அதிகாலையில் பயண்ததை தவிர்ப்பது நல்லது. வாகனத்தை இயக்குபவர் தூக்க கலக்கத்தில் லேசான கண் அசந்தாலும் பெரும் விபத்தில சிக்கும் வாய்ப்பு உள்ளது.

Advertisement