காங்கிரசுக்கு ஓட்டுப்போட மக்களுக்கு விருப்பமில்லை: பிரதமர் மோடி

11


புதுடில்லி: காங்கிரசுக்கு ஓட்டுப்போட சாமானிய மக்களுக்கு விருப்பமில்லை. இளைஞர்களின் ஓட்டு அதிகரித்து வருவதால், காங்கிரசின் ஓட்டு சதவீதம் சரிந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


டில்லியில் நடந்த ஆங்கில டிவி சேனலின் விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் பலத்தை இந்த மாநாடு உணர்த்துகிறது.கடந்த11 ஆண்டுகளில் நமது பலத்தை நாம் உணர்ந்து வருகிறோம்.நமது உள்கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளோம். மேட் இன் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான இன்ஜீனாக உள்ளது. இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளோம். நமது தன்னம்பிக்கை காரணமாக பல நாடுகள் நம்முடன் ஒப்பந்தம் போட ஆவலாக உள்ளன. நமது வர்த்தக ஒப்பந்தத்தால் பலர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.


உலகத்திற்கான வளர்ச்சி இன்ஜினாக இந்தியாவை மாறியுள்ளது. நமது டிஜிட்டல் கட்டமைப்புகளை பார்த்து உலகம் வியப்பில் உளளது. உலகின் மிகப்பெரிய 3வது மெட்ரோ கட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது.நமது பலத்தை உணர்ந்து கொண்டதால் தான் இது சாத்தியம் ஆகி உள்ளது.வந்தேபாரத், நமோ பாரத் போன்ற ரயில் சேவைகளும் சாத்தியம் ஆகி உள்ளன.


டில்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் காங்கிரசின் போராட்டம், அக்கட்சியின் கொள்கை காலாவதி ஆகிவிட்டதை உணர்த்துகின்றன. இந்த மிகப்பெரிய தவறு காரணமாக காங்கிரஸ் மீது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.போராட்டத்தை நியாயப்படுத்தமஹாத்மா காந்தி பெயரை அக்கட்சி பயன்படுத்துகிறது.சட்டையில்லாமல் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரசின் ஆணவம் மட்டுமே காரணம்.நாட்டின் எந்த வளர்ச்சியையும் எதிர்ப்பதாகவே காங்கிரசின் எண்ணம் உள்ளது.காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் சட்டம், ஆப்பரேஷன் சிந்தூர் , சர்ஜிக்கல் தாக்குதல், ஆகியவற்றையும் எதிர்த்தது.


சாமானிய மக்கள் காங்கிரசுக்கு ஓட்டுப்போட விரும்பவில்லை. இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது காங்கிரசின் ஓட்டு சதவீதம் சரிவை சந்திக்கிறது. 4 மாநிலங்களில் மட்டுமே தற்போது காங்கிரஸ் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement