இஸ்ரேலை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்; அமெரிக்க ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
வாஷிங்டன்: இஸ்ரேலில் உள்ள அமெரிக்க துாதரகத்தில், அவசரகால பணிகளுக்கு தேவைப்படாத ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மேற்காசிய நாடான ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் இஸ்ரேல் மீதும் ஈரான் எந்நேரத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க துாதரகத்தில், அவசரகால பணிகளுக்கு தேவைப்படாத ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேலுக்கான அமெரிக்க துாதர் மைக் ஹக்கபி வலியுறுத்தி உள்ளார்.
பாதுகாப்பற்ற சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், விமான போக்குவரத்து போதிய அளவில் இருக்கும் போதே வெளியேறுவது பாதுகாப்பானது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
உலகில் போர்கள் என்று ஓயும்? என்று மக்கள் நிம்மதியாக வாழமுடியும்? ஏன் போர்? எதற்கு போர்? சமரசம் செய்துகொண்டு போரை நிறுத்தமுடியாதா?மேலும்
-
கூட்டணியில் நீடிக்கும் இழுபறி; முதல்வர் ஸ்டாலினுடன் சிதம்பரம் சந்திப்பு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
-
துபாயில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பினார் பிவி சிந்து
-
ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்