துபாயில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பினார் பிவி சிந்து
நமது நிருபர்
வான்வெளி மூடப்பட்டதால், துபாய் விமான நிலையத்தில் சிக்கியிருந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பத்திரமாக நாடு திரும்பினார். அவர், ''அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி'' என்றார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான ராணுவத் தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவியது. அபுதாபி, துபாய், தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இங்கிலாந்தின் பர்மிங்கமில் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க விமானத்தில் பயணித்த பி.வி.சிந்து துபாயில் சிக்கினார். பின்னர் அவர் மற்றும் அவரது குழுவினர் துபாய் விமான நிலையத்திற்கு அருகே ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். தற்போது பி.வி.சிந்து, தன் குழுவினருடன் பத்திரமாக நாடு திரும்பியுள்ளார்.
பெங்களூரு விமான நிலையத்திற்கு பத்திரமாக அவர் வந்து இறங்கினார். சமூக வலைதளத்தில் பிவி சிந்து வெளியிட்ட பதிவில், ''கடந்த சில தினங்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடினமான சூழலிலும் துபாய் விமான நிலையத்தில் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி'' என பதிவிட்டுள்ளார்.
கான்டூரா நான் துபாயில் தான் இருக்கிறேன். ஒரு பிரச்னையும் இங்கு இல்லை. உல்லாச பயணியர்களுக்கு தான் பிரச்சனை. நாங்கள் எந்தவித பதட்டம் இல்லாமல் எங்கள் வாழ்க்கையை கவனிக்கிறோம். நீ உன் வேலையை பாரு. அவ்வளவு கரிசனை இருந்த உங்க ட்ராவிடிய அப்பா கிட்ட சொல்லி ஸ்டிக்கர் ஓட்டுன பஸ்ஸு விட சொல்லு.
குடும்ப நலத்துக்காக எத்தனை ஆயிரம் பேர் தொழில் செய்கிறார்கள், அவர்கள் நிலை என்ன, இவன்க மட்டும் நலமாக வந்துட்டாங்க என்று சொல்லணும், அந்த குடும்பங்கள் இன்று நின்மதி இல்லாமல் இருக்கிறாங்க, அவங்க இந்த செய்தியை பார்த்து எப்படி கஷ்டப்படுவாங்க, ஏன்னா அவங்க ஏழைகள்,
அதுக்கென்ன செய்யமுடியும்?
நம்புங்க.
உன்கிட்ட நாங்க வந்து இங்க கஷ்ட படறோம்னு சொன்னமா? இவங்க மட்டும் இல்லை இன்னும் நெறய பேரு ஊருக்கு போனாங்க, இங்க நாங்க நலமா தான் இருக்கோம் ,நாங்க எப்போ தேவையோ அப்போ போவோம் , நீ உன் வேலையை பாரு
சோத்துக்கு கஷ்டபடும் சிட்னி அறிவாளிமேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு