அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: 'அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடி செய்யப்பட்டது. ஓட்டுகள் திருடப்பட்டன. நமது தேர்தலைப் பார்த்து உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டினார். வெனிசுலா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தினார். தற்போது தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அதிபர் டிரம்ப் விரும்புகிறார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடிகள் செய்யப்பட்டன. ஓட்டுகள் திருடப்பட்டன. நமது தேர்தலைப்பார்த்து உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது. நாம் அவற்றை சரிசெய்யப் போகிறோம்.
இல்லையெனில் நமக்கு இனி ஒரு நாடு இருக்காது. குடியரசுக் கட்சியினர் அனைவரும் போராடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவைக் காப்பாற்றுங்கள் சட்டம் அவசியம். தேர்தலில் ஓட்டெடுப்பின் போது, அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.
ஓட்டளிக்க அனைத்து வாக்காளர்களும் குடியுரிமைச் சான்றைக் காட்ட வேண்டும். நோய்வாய்பட்டவர்கள், ராணுவத்தினரை தவிர மற்றவர்களுக்கு மெயிலில் இனி ஓட்டுக்கள் இல்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்குப் பட்டம் வேறு உலகின் மிக சிறந்த ஜனநாயக நாடு என்று
வாயால் சிரிக்கவில்லை என்பதையும் சேர்த்து இன்னும் சுவைபட சொல்லியிருக்கலாம்.
முதலில் ட்ராம்பிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றுங்கள் மக்களே. பதவி வெறி வந்துருச்சு. அடுத்த நாட்டின் வளம் மீது ஆசை வந்துருச்சு. வயசு 75 தண்டியாச்சு இன்னும் ஆசை விடலை .
அங்கு கள்ள ஓட்டுப் போட்டு பிடிபட்டால் பல ஆண்டுகள் சிறை. இங்கு கள்ளப் பணம் எரிந்து பிடிபட்டால் கூட ஆண்டுக் கணக்கில் விசாரணை மட்டுமே நடக்கும். ஆமாம். இந்தியாவில் கள்ள ஓட்டு போட்டதால் சிறைத்தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர்?
ரஷ்யாவைப் போல் தேர்தல் என்ற ஒன்று இல்லாமலேயே, நானே வாழ்நாள் அதிபராக இருக்கப் போகிறேன் என்பதை நாசுக்காக வெளிப்படுத்தும் விதம் இது தான். செஞ்சாலும் வியப்பதற்கில்லை.
ஒரு கோமாளியை தேர்ந்தெடுத்து வாழ்வில் மிகப்பெரிய தப்பு செய்த மக்கள் அழுது கொண்டே இருக்கிறார்கள் இவனை பார்த்து உலகமே சிரிக்கிறது
அமெரிக்கர்களில் கூட நல்லவர்கள் இல்லையே. சிகப்பா உள்ளவனும் பொய் சொல்லுவன்
உன்னை பார்த்து ஊரே சிரிக்குது
வாக்காளர் அடையாளம். குடியுரிமை சான்று. ஒரு நாட்டில் வாக்களிக்க கட்டாயம் தேவை. இதற்கு நிலையான விதிகள் வாக்காளர் யார், குடியுரிமை பற்றி விளக்கம் அவசியம். ஒருவர் நாடு மாறினால், மதம் மாறினால் அன்றைய நாள் முதல் தான் தற்காலிக குடிமகன். உடன் அரசு சலுகைகள் ஓட்டுரிமை கூடாது. நிரந்தர குடியுரிமை அவர்களுக்கு மற்றும் வாரிசுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகள் நன்னடதை அடிப்படையில் 60 ஆண்டுகளுக்கு பின் தான் வழங்க வேண்டும். ஓட்டுரிமை மிக பெரிய ஆயுதம். அமெரிக்காவை காக்க டிரம்ப் முடிவு சரியே.மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு