ப.சிதம்பரத்தை பகடைக்காயாக பயன்படுத்தும் காங்கிரஸ்: திமுகவுடன் பேச திடீர் ஏற்பாடு
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினர்.
தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை தொடர்பான முடிவை வெளியிட, தி.மு.க.,வுக்கு இன்று இரவு வரை காங்கிரஸ் தலைமை கெடு விதித்துள்ளது. தி.மு.க., குழுவினரிடம், காங்கிரஸ் குழுவினர் நடத்திய சமீபத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால், தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
இந்த சூழலில் இன்று (மார்ச் 03) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சந்தித்து பேசினார். அவருடன் காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உடன் சென்று இருந்தார்.
கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதி செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது.
இவனுக்கும் ராஜ்ய சபா சீட் வேண்டும் அதற்கு டம்ளக் தயவு வேண்டும்
நீ யாருன்னு எனக்கு தெரியும நா யாருன்னு உனக்கு தெரியு நம்ம ரெண்டு பெரு யாருன்னு இந்த ஊர்க்கே தெரியு
ரெண்டு பேரும் பெரிய நடிகர்கள் ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியாதான் இருக்கும்
ப சிதம்பரம் நோட்டு அடிக்கும் மெஷினை பாகிஸ்தானுக்கு கொடுப்பார்
2Gயில் திமுக பெருந்தலைகள் சிக்க சிவகங்கை சீமான்தான் காரணம் என்பர். இப்போ அவரை நம்பி இறங்கினால் 21 ம் பக்கம் டர்ர்ர்.
சரியான...
தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று 5000 ஆண்டு முன்னரே சின்னாளப்பட்டி கல்வெட்டில் எழுதியிருக்கிறார்.
ஸ்டாலின் அவர்களே. எத்தனை சீட் விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை. அது உம் இஷ்டம். ஆனால் பிஜெபி யின் முக்கிய பிரசாரகரான பப்புவை அழைக்க மறந்துவிடாதீர்கள்.
இவர்கள் இருவரும் தங்கள் கட்சி காங்கிரசை விட ஸ்டாலினின் நலம் விரும்பிகள். தமிழக காங்கிரசில் உள்ள தி.மு.க ஆதரவு கோஷ்டியின் தளகர்த்தாக்கள். ஒன்று இன்றைக்குள் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகலாம். இல்லாவிட்டால் இவர்களை வைத்து தமிழக காங்கிரசை தி.மு.க உடைக்கலாம். ப.சிதம்பரம் ஏற்கெனவே தி.மு.கவிற்கு ஆதரவாக 2001 சட்டசபை தேர்தலில் காங்கிரசை உடைத்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற ஒரு கட்சியை நடத்தியவர் தான். காங்கிரசை உடைப்பது ஒன்றும் இவருக்கு புதிதல்ல.
காங்கிரஸ், திமுக கூட்டணி நிச்சயம் உண்டு. இறுதியில் 31 + 1 என்று முடிவாகும்.மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு