அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்: நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்
மதுரை: ''திரைப்படங்களில் அரசியல் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் சினிமாவில் சமூக பிரச்னைகளை தைரியமாக கூறும் சூழல் இருக்கிறது,'' என, மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது : சமூகத்தின் பிரதிபலிப்பாக சினிமா உள்ளது. தமிழ் சினிமாவில் சமூக பிரச்னைகளை தைரியமாக கூறும் சூழல் இருக்கிறது. படங்களில் அரசியல் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். நல்ல குடிமகனாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய படத்தில் செய்ய முடியாத விஷயங்களை தயாரிப்பின் மூலம் மேற்கொள்கிறேன்.
எனது படத்தை வெளிவரவிடாமல் இடையூறு செய்பவர்கள் யார் என பலரும் கேட்கின்றனர். ரசிகர்கள் இருப்பதால்தான் தைரியமாக அத்தகைய தடைகளை தாண்டி வர முடிகிறது என்பதை உணர்த்துவதற்காக. சினிமாவில் எனக்கு கொடுத்த வாய்ப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு துணையாக இருப்பவர்களை எவ்விடத்திலும் நான் விட்டுக் கொடுத்ததில்லை. இவ்வாறு கூறினார்.
மேலும்
-
பிரதமர் மோடி தமிழகம் வருகை முதல் திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சு வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,28)!
-
ஸ்டிரைக்கை தொடர்ந்த வருவாய்த்துறையினர்
-
வரிவிதிப்பை ரத்து செய்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்; மறு விசாரணை சாத்தியமா என கேட்கிறார் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் மரணம்; டி.எஸ்.பி.,க்கு எதிரான வாரன்ட் ரத்து
-
'போக்சோ' வழக்கில் ஆயுள் தண்டனை
-
குன்றத்தில் வேல் யாத்திரை நிறைவு