ஈரானுக்கு சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகள் ஆதரவு
பீஜிங்; மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநிறுத்த ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று சீனா, வட கொரியா ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த தாக்குதல்களை இறையாண்மையை மீறுவதாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. தாக்குதல்களில் ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி கொல்லப்பட்டார். இருப்பினும், தாக்குதல்களை இரு நாடுகளும் நிறுத்தவில்லை.
பதில் தாக்குதல்கள் நிச்சயம் இருக்கும் என்று ஈரானும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களை உலகின் பல நாடுகள் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், வடகொரியா, சீனா ஆகிய நாடுகள் ஈரான் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளன. மத்திய கிழக்கில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தி இருக்கின்றன.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது; ஈரான் நாட்டு தலைவரை கொல்வது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீறலின் உச்சமாகும். இந்த தாக்குதல்கள் ஐநாவின் நோக்கங்கள், பன்னாட்டு நாடுகள் இடையேயான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது.
சீனா இந்த தாக்குதல்களை கடுமையாகவும், வலிமையாகவும் சீனா கண்டிக்கிறது. ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பதற்ற நிலைமையை மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். மத்திய கிழக்கு மற்றும் உலகநாடுகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணும் கூட்டு முயற்சியை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு சீனா வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கை என்று அறிக்கை ஒன்றில் வடகொரியா கண்டித்துள்ளது.
சர்வதேச சட்டங்களை மீறும் ஒரு இழிவான கொலை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை மலேசியா கண்டித்துள்ளது. உடனடி போர்நிறுத்தம் அவசியம் என்று அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
உடனடி போர்நிறுத்தம், மக்களின் பாதுகாப்பு மற்றும் தீவிர பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று மலேசியா அழைப்பு விடுக்கிறது. இத்தகைய ஒரு நெருக்கடியை போரால் தீர்க்க முடியாது. ராஜ தந்திரம், அரசியல் நெஞ்சுரம் இதற்கு தேவை.
இவ்வாறு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறி உள்ளார்.
ஆதரவுன்னு சொல்லி என்னத்த செய்யறது. அங்கே ஆள்பவர்களை அடிச்சி தூக்கி ஆட்சி மாற்றம் செய்யறாங்க.
சீனா, ரஷியா, வடகொரியா பூவுலகின் அணு ஆயுத நண்பர்கள். உலகில் தன் தேசத்தை மர்மமான முறையில் ஆள்பவர்கள். ரஷியா உக்ரைனை ஆக்கிரமிக்கலாம். சீனா இந்தியா, திபெத்.. ஆக்கிரமிக்கலாம். இதற்கு சர்வதேச சட்டம் விதி விலக்கு. பாகிஸ்தான், ஈரான் போன்ற பகுதியில் பல நூறு ஆயுத குழுக்கள் இஸ்ரேல், அமெரிக்கா, இந்தியாவை தாக்கும் வரை இருக்கலாம். இவர்களை தாக்கினால் இருக்க கூடாது. 5 கண்டங்களுக்கு மக்கள் தொகை, பொருளாதார அடிப்படையில் 5 உறுப்பினர்கள். ஒருவருக்கு ஒரு வீட்டோ அதிகாரம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும்.
ட்ரம்ப் சண்டி தனம் எல்லை மீறி வருக்குறது. உலக நாடுகள் ஓன்று பட்டு எதிர்க்க வேண்டும்மேலும்
-
தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு ஆலோசனை துவக்கம்
-
சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி; அரையிறுதிக்கு முன்னேற்றம்
-
போர் நடந்தாலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்படாது!
-
பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.83 லட்சம் கோடி
-
541 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல்; தாக்கி அழித்ததாக சொல்கிறது யுஏஇ!
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம் எதிரொலி; துபாய் பன்முக கலாசார பொழுதுபோக்கு மையம் மூடல்