பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.83 லட்சம் கோடி
புதுடில்லி: கடந்த பிப்ரவரி மாதம், நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 8.10 சதவீதம் உயர்ந்து 1.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வருவாய் 1.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் இருந்து கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதே வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கடந்த மாதம், உள்நாட்டு வரி வருவாய் 5.30 சதவீதம் அதிகரித்து 1.36 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி வரி வருவாய் 17.20 சதவீதம் உயர்ந்து 47,837 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மொத்தம் 22,595 கோடி ரூபாய்க்கு ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வசூல் 18 சதவீதம் அதிகரித்து 6,811 கோடி ரூபாயாக உள்ளது.
@block_B@ பிப்ரவரி 2026 பிரிவு மதிப்பு (ரூ. கோடியில்)
மத்திய ஜி.எஸ்.டி., 37,473
மாநில ஜி.எஸ்.டி., 45,900
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 1,00,236
மொத்த வசூல் 1,83,609block_B
செத்துப்போன பொருளாதாரத்தில் இவ்வளவு வரி என்றால் காங்கிரஸ்தான் செத்துப்போனது என்பது நிச்சயம் மறுக்கமுடியாத உண்மை.
உலக சாதனை
வசூல் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது மாநிலங்களுக்கு ஒதுக்க நிதியையும் அதிகரிக்க வேண்டும்மேலும்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி; போர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கணிக்கும் டிரம்ப்
-
அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு
-
டில்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி முர்மு
-
டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!
-
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்