தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு ஆலோசனை துவக்கம்

2

மதுரை: மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இபிஎஸ் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.


சட்டசபை தேர்தலை முன்னிட்டு மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது.இதில் தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன், த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.


முன்னதாக காலையில் ரிங் ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர். அங்கு அவர்களுடன் பியூஷ் கோயல் முன்னிலையில் இபிஎஸ் திடீர் ஆலோசனை நடத்தினார். தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. விரைவில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவானது. இதற்கிடையே மார்ச் 4ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதிலும் தொகுதி பங்கீடு குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் பழனிசாமி ஆலோசிக்க உள்ளார்.

Advertisement