ஈரானில் 3வது நாளாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்; 555 பேர் உயிரிழப்பு

1

நமது நிருபர்




ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.



மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் இணைந்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலில், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அணுசக்தி மையங்கள் உள்ள நகரங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. ஆட்சியாளர் கமேனியின் இல்லம் மற்றும் அலுவலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.

இதில், கமேனி கொல்லப்பட்டார். அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர். ஈரானில் உள்ள 131 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன என ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement