பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு: ஏப்.,2 ல் தீர்ப்பு
விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கில், ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த திமுக ஆட்சியின் போது விதிமுறை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடியே 36 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012 ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை அக்., வரை நடந்தது. 57 சாட்சிகளிடம் விசாரித்ததில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், ஏப்.,2ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி மணிமொழி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பொன்முடி மீதான வழக்கில் தீர்ப்பு அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்முடி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 3 வருட தண்டனையில் இருந்து இடைக்கால தடை விதித்து இருக்கு. ஒரு வருடமாக இடைக்கால தடை.
நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம். என்று மக்கள் தீர்ப்பை சரியாக வழங்ககுகிறார்கலோ அன்றுதான் நாம் நீதிமன்றத்தை குறை சொல்லமுடியும்.
மாநில காவல் துறை வழக்கை தொடர்ந்து இருக்கிறது. நடத்தியது.
முடிவு என்ன என்று நன்கு தெரியும்.
விடுதலை கண்டிப்பாக. அதற்கு தான் கீழ் நீதிமன்றத்தில் அவசர அவசரமாக தீர்ப்பு வருகிறது. ஆட்சி முடிவதற்குள் திமுக அமைச்சர்கள் எல்லோரும் விடுதலை ஆகி விடுவார்கள். இதுதாண்டா திராவிட மாடல் ஆட்சி.
மக்கள் முட்டாள்கள் கிடையாது. எல்லா அமைச்சர்களும் உத்தமர்கள் கிடையாது
குற்ற பத்திரிக்கையில், பொன்முடி என்ற பெயரே இல்லை. முதல் பக்கம் 2வது பாராவில் பொன் மூடி என்றுள்ளது. எனவே இந்த வழக்கிற்கும் திரு பொன்முடி அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதி செய்யப்படுகிறது
விசாரணை முடிந்த பின்னர் எதற்கு ஒரு மாத கால தாமதம் ?. இது நிறைய சந்தேகங்களை மட்டுமே எழுப்புகிறது
golden ஹேர் வீட்டில் எப்படி சைவமா வைணவமா...?
போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பு வரும் வாயில் விரலை வைத்து கொள்ளுங்க எந்த வழக்கிலாவது தண்டனை வாங்கி கொடுக்க துப்பு இருக்கா
மக்களுக்கு நன்கு தெரியும் 99.9% அரசியல் வாதிகள் ஊழல் பேர்வழிகள் என்று. ஆனாலும் அவர்களுக்கு வாகு போடுகிறார்கள் . பதவி துஸ்பிரயோகத்திற்கும் வாக்கு போடுகிறார்கள் .. இதில் தீர்ப்பு என்பது 0.001 % வீதம் கூட கிடையாது
கீழ் நீதி மன்றங்கள் தானே, ஒரே தமாஷ் தீர்ப்பு தான் போங்க.மேலும்
-
சிவகங்கையில் சோகம்; மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் பலி; 50 பேர் காயம்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி; போர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கணிக்கும் டிரம்ப்
-
அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு
-
டில்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி முர்மு
-
டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!