மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: டில்லியில் இருந்து 2 நாட்களில் 760 சர்வதேச விமான சேவைகள் ரத்து
புதுடில்லி: டில்லியில் இருந்து 3வது நாளாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையில் பாதிப்பு காணப்படுகிறது. 2 நாட்களில் 760 விமான சேவைகளும், இன்று ஒருநாள் மட்டும் 87 சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுத்தாக்குதல் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. போர் நீடிப்பதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் இன்னமும் ஓயவில்லை.
இந் நிலையில், தலைநகர் டில்லியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையில் 3வது நாளாக பாதிப்பு நிலவுகிறது. டில்லி விமான நிலையத்தில் இருந்து இன்று மட்டும் கிட்டத்தட்ட 87 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
டில்லி விமான நிலையத்தில் இருந்து 37 புறப்பாடுகளும், 50 வருகைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக, 2 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் 760 விமான சேவைகள் ரத்தாகி இருக்கின்றன.
Passengers to USA Canada can reach via Honkong,Singapore.மேலும்
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் தமிழக மாணவி பலி
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; உபியில் டபுள் டக்கர் பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி
-
13 பேருக்கு செயற்கை கால்கள்
-
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மனு