டி.ஆர்.இ.யூ., ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கம் (டி.ஆர்.இ.யூ.,) சார்பில், தொழிலாளர்களுக்கான அலவன்சுகளை வழங்கக் கோரி கோட்டத் தலைவர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே தொழிலாளர்களுக்கு பிப்., மாத சம்பளத்துடன் அலவன்சுகளை வழங்க வேண்டும். ரயில்வேக்கு தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் லெனின், டி.ஆர்.இ.யூ., கிளைச் செயலாளர் சேதுக்கரை, பொதுக்கிளை பொருளாளர் ஹரிகுமார், கோட்ட செயலாளர் சிவக்குமார், உதவி தலைவர் வினோத் பாபு, ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன், துணை பொதுச் செயலாளர் கார்த்திக் சங்கிலி, கார்டு கவுன்சில் கோட்ட தலைவர் முனீஸ்வரன், ஸ்டேஷன் மாஸ்டர் சங்க சட்ட ஆலோசகர் விஜயராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறது: இபிஎஸ் கண்டனம்
-
இந்தியர்கள் பாதுகாப்பு: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
-
ஈரான் அணுசக்தி நிலையம் போரில் சேதம்; அறிவித்தது சர்வதேச அணுசக்தி முகமை
-
பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து
-
ஈரானில் பாதுகாப்பான இடங்களில் இந்திய மாணவர்கள்: தூதரகம் அறிக்கை
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement