ஈரானில் பாதுகாப்பான இடங்களில் இந்திய மாணவர்கள்: தூதரகம் அறிக்கை

4


டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் உதவியை ஏற்க மறுத்துவிட்டனர் என இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.


அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.இதன் காரணமாக, அரபு நாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் ஈரானுக்கான இந்தியத் தூதரகம் இன்று( மார்ச்03) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெஹ்ரானில் உள்ள அதிகபட்சமான அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்திய மாணவர்கள் மாணவர்கள் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு விட்டனர். சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தூதரகத்தின் உதவியை நிராகரித்துவிட்டு அங்கேயே தங்கி உள்ளனர்.


ஏற்கனவே தூதரகம் வெளியிட்ட அறிவிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது. வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும். போராட்டம் நடக்கும் இடங்களுக்கு செல்வதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்குவதற்கு முன்னரே, ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என தூதரகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement