இந்தியர்கள் பாதுகாப்பு: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

7


புதுடில்லி: ஓமன், குவைத் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி, இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.


ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. அந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்புடன் அழைத்து வரும் பணிகளை மத்திய அரசு துவக்கி உள்ளது.


இந்நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலீத் அல் ஹமாத் அல் முபாரக் அல் சபா உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசினார்.



அந்த நாடுகள் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தார்.

Advertisement