ஈரான் புதிய ராணுவ அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்
டெஹ்ரான்: ஈரானின் புதிய ராணுவ அமைச்சர், பதவியேற்ற 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இவ்விரு நாடுகளின் அதிரடி தாக்குதலுக்கு ஈரான் மதகுரு ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டார்.
ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் அலுவலக கட்டடத்தை தாக்கியதாக ஈரான் அறிவித்தது. இனிமேல்தான் தாக்குதல் தீவிரம் அடையும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இந் நிலையில் ஈரான் புதிய ராணுவ அமைச்சராக புரட்சிகர காவல்படையின் ஜெனரல் சையத் மஜித் எபின் அல்ரசா பதவியேற்றார். அவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தாக்குதல் டெஹ்ரானில் நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் சையத் மஜித் எபின் அல்ரசா கொல்லப்பட்டுவிட்டார் என்று ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முன்னதாக அமீர் சனிர்சாதே ராணுவ அமைச்சராக இருந்தார். அவர் கொல்லப்பட்டதால் புதிய ராணுவ அமைச்சராக சையத் மஜித் எபின் அல்ரசா நியமிக்கப்பட தற்போது அவரும் கொல்லப்பட்டுள்ளார்.
அதை விட மோசமான பாக்கிஸ்தான் மட்டும் இவர்கள் கண்டுக்கவே மாட்டார்கள்.. என்ன ரகசிய உடன்பாடோ ??
நிரம்பி வழியுதுன்னு பேசிக்கிட்டாங்களே....
ஈரானின் நிலை ஹமாஸ் போல உள்ளது. காசா அழிந்தது. ஈரானுக்கு இந்த நிலை வராமல் இருக்க, ஈரான் சரணடைவது நல்லது. கொஞ்சமாவது மிஞ்சும்.
ஈரான் சரணடைந்து பேச்சு நடத்த வேண்டும். cctv வைச்சி பாக்குற மாதிரி பாக்குறாங்க முண்ட முடியாது முனக முடியாது ஆமா
யாராக இருந்தாலும் மனித நேயம் காக்கப்பட வேண்டும் வேண்டாம் போர் அமைதி நிலவட்டும் பகவான் சங்கல்பம்
35000 ஈரானியர்களைக் கொன்ற போது கொமேனி சிந்திக்கவில்லையே
ஈரானின் IRGC ன் ஆறு முக்கிய தளபதிகளில் ஒருவராவது மொசாட் ஏஜெண்டாக இருப்பார். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில்தான் இதுபோன்ற ஈரானிய ராணுவ உயரதிகாரிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதே போல்தான் அந்நாட்டின் உச்ச அதிபர் கமேனியும் கொல்லப் பட்டார். அமெரிக்காவின் CIA எல்லாம் மொஸாட்டுக்கு அடுத்துதான். இஸ்ரேலின் மொஸாட் ஏஜெண்டுகள் எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் ஊடுருவக் கூடிய வல்லமை படைத்தவர்கள். உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்தது, இஸ்ரேலிய உளவுத்துறையான MOSSAD.