ஈரான் புதிய ராணுவ அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்

10

டெஹ்ரான்: ஈரானின் புதிய ராணுவ அமைச்சர், பதவியேற்ற 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இவ்விரு நாடுகளின் அதிரடி தாக்குதலுக்கு ஈரான் மதகுரு ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டார்.

ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் அலுவலக கட்டடத்தை தாக்கியதாக ஈரான் அறிவித்தது. இனிமேல்தான் தாக்குதல் தீவிரம் அடையும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

இந் நிலையில் ஈரான் புதிய ராணுவ அமைச்சராக புரட்சிகர காவல்படையின் ஜெனரல் சையத் மஜித் எபின் அல்ரசா பதவியேற்றார். அவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தாக்குதல் டெஹ்ரானில் நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் சையத் மஜித் எபின் அல்ரசா கொல்லப்பட்டுவிட்டார் என்று ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முன்னதாக அமீர் சனிர்சாதே ராணுவ அமைச்சராக இருந்தார். அவர் கொல்லப்பட்டதால் புதிய ராணுவ அமைச்சராக சையத் மஜித் எபின் அல்ரசா நியமிக்கப்பட தற்போது அவரும் கொல்லப்பட்டுள்ளார்.

Advertisement