பேச்சு நடத்த ஈரான் விரும்பியது; ஆனால் காலம் கடந்துவிட்டது: டிரம்ப்

13

வாஷிங்டன்: ஈரான் பேச்சு நடத்த விரும்பியது. ஆனால் காலம் கடந்துவிட்டது என்று கூறிவிட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகள் பிப்.28 முதல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தாக்குதல் 4வது நாளை எட்ட, ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளதாவது;

அவர்களின் (ஈரான்) வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை என அனைத்து படைகளின் தலைவர்கள் போய்விட்டனர். அவர்கள் பேச்சு நடத்த விரும்பினர். காலம் கடந்துவிட்டது என்று நான் சொல்லிவிட்டேன்.

இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் கூறி உள்ளார்.

ஈரான் தரப்பில் இருந்து எப்போது எந்த தருணத்தில் பேச்சு நடத்த கேட்கப்பட்டது, யார் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் உள்ளிட்ட விவரங்களை டிரம்ப் வெளியிடவில்லை.

Advertisement