தொடர் தோல்விகளை எதிர்கொள்ளும் சீன வான் பாதுகாப்பு அமைப்பு
பீஜிங்: பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் தயாரிப்பான ஹெச்கியூ 9 பி வான் பாதுகாப்பு கவசம் தோல்வியை சந்தித்து உள்ளது.
வான் பாதுகாப்பு கவசமான ரஷ்யாவின் எஸ் 300 மற்றும் அமெரிக்காவின் பேட்ரியாட் பிஏசி -2 ஐ முன்மாதிரியாக கொண்டு சீனா ஹெச் கியூ - 9 பி என் வான்பாதகாப்பு கவசத்தை உருவாக்கியது. கடந்த 2006 ல் பரிசோதனைக்கு பிறகு பயன்பாட்டில் கொண்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமைப்பை சீனா பயன்படுத்தி வருகிறது. 260 கிமீ சுற்றளவில் இருந்து வரும் ஏவுகுணைகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த அமைப்பை பீஜிங், திபெத் , ஷின்ஜியாங் மற்றும் தென் சீன கடல் பகுதியில் நிறுவியிருந்தது.
மேலும், இந்த கவசத்தை பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கும் விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ஆப்பரேஷன்சிந்தூர் நடவடிக்கையின் போது இந்த வான் பாதுகாப்பு அமைப்பு சரியாக வேலை செய்யவில்லை. இதனை தாண்டி சென்று பாகிஸ்தான் விமானபடைதளங்களை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தன.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் தனது சொந்த தயாரிப்பான பாவர் -373 வான் பாதுகாப்பு கவசத்துடன், சீனா தயாரிப்பையும் பயன்படுத்தி வந்தது.
ஆனால், இந்த இரண்டு பாதுகாப்பு கவசங்களை மீறி இரு நாடுகள் தாக்குதல் நடத்தியதுடன், அந்த நாட்டின் ஆட்சியாளராக விளங்கிய கமேனியையும் கொன்றுவிட்டன. அதிநவீன போர் விமானங்கள், டிரோன்கள் ஆகியவை மூலம் வான்பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் கட்டளை அமைப்புகள் குறிவைத்து சீன வான்பாதுகாப்பு அமைப்பை முடக்கின.
ரேடார் அமைப்புகள், சென்சார் மற்றும் லாஞ்சர் இடையிலான இணைப்பை இருநாட்டு விமானப்படைகள் துண்டித்து அவற்றை செயல் இழக்க செய்தது தெரியவந்துள்ளது.
அதிக அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வண்ணம் ஹெச் கியூ - 9 பி வடிவமைக்கப்பட்டாலும், அதிநவீன போர் விமானங்கள் மற்றும் குறைந்த உயரத்தில் இருந்து துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை சமாளிப்பதில் இந்த அமைப்பு பின்னடைவை சந்தித்துள்ளது. தீவிரமான போர் சூழலில் இந்த அமைப்பு போதிய அளவில் விமானங்ளை கண்காணிக்க முடியவில்லை. அதிவேகமாக நகரும், குறைந்த உயரத்தில் இருந்து தாக்கும் ஏவுகணைகளுக்கு எதிராகவும் தோல்வியையே சந்தித்தன என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இரண்டாவதுமுறையாக சீன வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வியை சந்தித்து உள்ளதால், அதன் செயல்திறன் குறித்த பாதுகாப்பு ஆய்வாளர்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இந்த நாடுகள் தயாரிக்கும் போர் ஆயுதங்களுக்கு அடுத்தவர்கள்தான் பலிகடாவா என்னைய்யா முதலில் உங்கள் நாடுகளில் தயாராகும் போர் ஆயுதங்களை நீங்களே உங்கள் நாடுகளில் பயன்படுத்தி உங்கள் மக்களை அடக்குக்குங்கள் அடுத்தவர்களை அழிக்கும் எண்ணம் கொண்டு அலையாதீர்கள் விற்பனை செய்யாதீர்கள்
சீனாவின்-ACTIVE PROTECTION SYSTEM மற்றும் ANTI BALLISTIC MISSILE எல்லாம் பெரும் தோல்வி அடைந்துள்ளன.
சீனாவின் FIGHTER PLANES எல்லாம் புஷ்வாணம் ஆகிவிட்டன.
இது சீனாவுக்கு முதலிலேயே தெரியும். இப்போது முழு உலகமும் தெரிந்து கொண்டுள்ளது
சீனாவில் தயாரிக்கப்பட்டது எப்போதும் இப்படித்தான் இருக்கும்.
ரிவர்ஸ் என்ஜினியரிங் எப்போதும் வெற்றியைத் தராது ........
உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன் , ஆனால் சீனா எப்போதும் போரினை சந்தித்ததில்லை , முதுகில் குத்தியே தங்களின் வெற்றியை பதிந்துள்ளனர் , அப்படிப்பட்டவர்களுக்கு எப்படி மற்றைய நாட்டின் போர்தளவாடங்கள் வேலை செய்யும் என்பதும் தெரியதல்லவா , இன்னொருமுறை அவர்கள் விற்பனை செய்யும்போது குறைந்த உயரத்தில் பறக்கும் தளவாடங்களை கண்டு ழிப்பது எப்படி என்பதனை include செய்வார்கள்
சீனா விளையாட்டு பொம்மை செய்வதில் திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளது. ஆனால் ஈரான் , பன்றிஸ்தான் ஏமாந்த விட்டது .
அப்படி போடு போடு.......மேலும்
-
கொல்லிமலை வான்வெளி பூங்காவில் இரவு வான் அதிசயங்கள் கண்டு ரசிப்பு
-
மாணவர்கள் லேப்டாப் கேட்டு ஆர்ப்பாட்டம்
-
பி.ஜி.பி., கலை கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
-
தேசிய தாய் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
-
குடிநீர் வழங்காததால் காத்திருப்பு போராட்டம்
-
தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி