தகவல் சுரங்கம்:தேசிய பாதுகாப்பு தினம்

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் 1966 மார்ச் 4ல் உருவாக்கப்பட்டது. இதன் நினைவாக 1972ல் இத்தினம் தொடங்கப்பட்டது. ராணுவம், துணை ராணுவம், போலீஸ் உட்பட நாட்டை பாதுகாக்கும், பாதுகாப்பு படைகளின் தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் கடை பிடிக்கப்படுகிறது.

'பாதுகாப்பை மேம்படுத்த மக்களை ஈடுபடுத்துங்கள், கல்வி கற்பிக்கவும், அதிகாரம் அளிக்கவும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பணியிடங்களில் நிதி, வருவாய் இழப்பு, சுகாதார பிரச்னை உட்பட பல பிரச்னைகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றியும் இத்தினம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

Advertisement