மாணவியரிடம் சீண்டல்; ஆசிரியருக்கு 'போக்சோ'
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காந்தி நகரை சேர்ந்தவர் பாபு, 53; அருகாமையில் உள்ள கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். இவர், மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடு வதாக புகார் எழுந்தது.
மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் தாமரைமணாளன் மற்றும் அலுவலர்கள், பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
அதில், பாபு மீதான புகார் உறுதியானது. மேலும், தலைமை ஆசிரியர் அறையில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது, மாணவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிந்தது.
தாமரைமணாளன் புகாரில், வரஞ்சரம் போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, பாபுவை தேடுகின்றனர். பாபுவை, 'சஸ்பெண்ட்' செய்து, கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத அமைப்புகளுக்கு குறி; ஈரானை தொடர்ந்து ஈக்வடாரில் அமெரிக்கா தாக்குதல்
-
வந்தது ஞானோதயம்: ஒற்றுமையே பலம் என்கிறார் மாணிக்கம் தாகூர்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 சரிவு; 2 நாட்களில் ரூ.3,680 குறைவு
-
தஞ்சையில் விஜய் பொதுக்கூட்டம் முதல் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 04)!
-
சாலை வசதி செய்து தர வேண்டி கோட்டூர் மலைவாழ் மக்கள் மறியல்
-
கலசப்பாடி மலை கிராமத்திற்கு மினி பஸ் இயக்கம் துவக்கம்
Advertisement
Advertisement