ரயில்வே ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி

சேலம்:ஈரோடு மாவட்டம் சடையம்பாளையம் சாலை, திருப்பதி கார்டனை சேர்ந்தவர் தர்மராஜா, 47. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர் சேலம், குரங்குச்சாவடியில் உள்ள, 'கிரீன் லைப் ஹோம்ஸ் பில்டர்ஸ்' நிறுவனத்தை, 2024ல் அணுகி வீட்டு மனை கேட்-டுள்ளார்.


அந்த நிறுவனம், மல்லமூப்பம்பட்டியில், 2,210 சதுரடி வாங்கி தருவதாக கூறியது. இதனால் அதே ஆண்டு நவ., 30ல், 5.50 லட்சம் ரூபாயை, தர்மராஜா வழங்க, அந்த நிறுவனத்தின் செந்-தில்குமார், திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டனர். ஆனால் இது-வரை நிலம் வாங்கி கொடுக்காத நிலையில், பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து தர்மராஜா, நேற்று அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.

Advertisement