'நான் முதல்வன்' செயல்பாட்டு மையம் தொடக்கம்

ஓமலுார்,:அரசு, தனியார் கல்லுாரி மாணவ, மாணவியரின் திறன்களை மேம்படுத்த, 'நான் முதல்வன் திட்டம்', தமிழக அரசால் செயல்-படுத்தப்படுகிறது. தமிழகத்தில், 11 அரசு பல்கலையில் இத்-திட்டம் நிறுவப்பட்டது.

அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம், துணை முதல்வர் உதயநிதி தொடங்கிவைத்தார். சேலம் பெரியார் பல்-கலையில், 'நான் முதல்வன் செயல்பாட்டு மையம்' தொடக்க விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் குத்துவிளக்-கேற்றினார். கலெக்டர் பிருந்தாதேவி, பெரியார் பல்கலை நிர்-வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி, 'நான் முதல்வன்' திட்ட பல்-கலை இயக்குனர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.-

Advertisement