பெர்த் டெஸ்ட்: ஜெமிமா அரைசதம்
பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் விளாச, இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன் எடுத்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. பெர்த்தில் துவங்கிய இப்போட்டியில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (4) ஏமாற்றினார். ஷைபாலி வர்மா (35) ஓரளவு கைகொடுத்தார். பிரதிகா ராவல் (18), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (19), தீப்தி சர்மா (7), ரிச்சா கோஷ் (11) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52) அரைசதம் கடந்தார். ஸ்னே ராணா (5), சயாலி (7), கிராந்தி (1) சொப் ரன்னில் அவுட்டாகினர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. காஷ்வீ கவுதம் (34*) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அனாபெல் 4, லுாசி ஹாமில்டன் 3, டார்சி பிரவுன் 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா (2), லிட்ச்பீல்டு (9), கேப்டன் அலிசா ஹீலி (13) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 96/3 ரன் எடுத்திருந்தது. எல்லிஸ் பெர்ரி (43), அனாபெல் (20) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சயாலி 2, கிராந்தி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மேலும்
-
சாராய விற்பனையை தட்டி கேட்டவர்கள் கொலை: இழப்பீடு தாமதத்தால் மறியல்
-
மின்வாரிய தற்காலிக ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
-
போலி அறக்கட்டளை பெயரில் ரூ.29 லட்சம் மோசடி: மூவர் கைது
-
தொழிலாளி கொலை வாலிபருக்கு 'காப்பு'
-
சிறுமியிடம் சீண்டிய முதியவருக்கு வலை
-
வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு: வனத்துறையினர் மெத்தனம்; விவசாயிகள் வேதனை