ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விலக்கு அளித்த விவகாரம்; மத்திய அரசுக்கு சசி தரூர் ஆதரவு
புதுடில்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா விலக்கு அளித்த விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்கள் அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை கட்டுக்குள் பராமரிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த விலக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக சாடி வருகின்றன. இது இந்தியாவின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளன.
தனது சொந்தக் கட்சியே விமர்சித்த போதிலும், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சசி தரூர் கூறியதாவது: இந்தியாவின் நலன்களுக்காக மத்திய அரசு எடுத்த முடிவுகளை நீங்கள் உண்மையிலேயே மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ரஷ்ய எண்ணெயை வாங்கி சுத்திகரிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு, அந்த விலக்கு அளிக்காவிட்டால், அவர்கள் அமெரிக்காவின் தடையை எதிர்கொள்ள நேரிடும்.சர்வதேச அளவில் அவர்களது ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கும். இந்த விலக்கு காரணமாக அந்த 30 நாட்களுக்கு அவர்கள் வெளிப்படையாக ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கலாம்.
சர்வதேச மோதல்களில் பொது நிலைப்பாடுகளை எடுக்கும்போது அரசு எதிர்கொள்ளும் சவால்களை விமர்சகர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இவ்வாறு சசி தரூர் கூறினார். மத்திய அரசுக்கு ஆதரவாக, சசி தரூர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலட்சியமாக இருக்க முடியாது!
ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு சசி தரூர் அளித்த பேட்டி: போர் நிறுத்தத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். பதற்றத்தைக் குறைத்து, ராஜதந்திர நடவடிக்கைகளைக் கோருவது இந்தியாவின் நலனுக்கு மிகவும் நல்லது.
@quote@இந்தியா ராணுவ ரீதியாக மோதலில் ஈடுபட வாய்ப்பில்லை என்றாலும், போரினால் ஏற்படும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். quote
எங்களைப் பொறுத்தவரை, இது அவர்களின் வாழ்க்கையையும், சிறப்பாகச் செயல்படும் திறனையும், வீட்டிற்கு பணம் அனுப்புவதையும் உண்மையில் பாதிக்கும் ஒன்று. எனவே இந்தியா அலட்சியமாக இருக்க முடியாது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.
காங்கிரஸின் நாட்டின் நன்மையை பேசம் தரூர் சார் கூறியது சரி. மோடி அரச ரஸ்ய ஆயிலை அமெரிக்காவும் ஐரோப்பாவும் நிர்பந்தமாக நிறுத்த சாங்ஷன் போட்டு கூட தைரியமாக நிறுத்தாமல் வாங்கிக்கொண்டு தான் இருந்தது. பிப்ரவரியில் ஒரு மில்லியன் பிப்பாய் ஒவ்வொரு நாளும் வாங்கியது. சாங்ஷன் நாட்களில் கப்பல்களுக்கு இன்ஷீரன்ஸ் தர்ம சங்கடம். இப்போது சாங்ஷன் நீக்கியதில் இன்க்ஷீரன்ஸ் கஷ்டமில்லை. கடலில் ரஷ்ய ஆயிலுடன் நிற்கும் கப்பலகளை கஷ்டமில்லாமல் வரவழைக்கலாம்.
I find it difficult to sit outside the govt and demand things because the govt has to live with the consequences. Congress MP Shashi Tharoor Perhaps the only leader in Congress who still understands responsibility beyond politics and won’t indulge in Anti India rhetoric.
இந்தியா ஏற்கனவே 2023 ஆம் ஆண்டிலேயே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டது. அதன் பிறகு பலமுறை அதை மீண்டும் வலியுறுத்தியது. உலக சந்தையில் கிடைக்கும் மலிவான கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும்,
அது அரேபிய நாடுகளானாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு ஒவ்வொரு நாளும் இதை தெளிவுபடுத்தி கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
அமெரிக்காவிற்கு இந்தியா பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்கிறது. அதற்கான கச்சா எண்ணெய் தடையின்றி கிடைக்க ரஷ்ய எண்ணெய் மீது தான் விதித்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் தடையை தானே விலக்கியுள்ளதாக கூறுகிறது.
சீனாவின் மேல் ஏன் அமெரிக்கா விதிக்கலன்னு சொல்லுமா...
இது பற்றிய சர்ச்சை ராகுல் மற்றும் காங்கிரஸ் காரர்களுக்கு மட்டும் தேவையானது. ஒரு நாட்டின் அரசு தம் மக்களுடைய நலன் களுக்காக எதை செய்ய வேண்டுமோ/ முடியுமோ அதை செய்து கொண்டு இருக்கிறது இன்றைய மத்திய அரசு. மற்றவர் பற்றி யோசித்து கொண்டு இருந்தால் நம் நிலையை பற்றி எதிர்கட்சி களுக்கு என்ன கவலை?
சில சுய அறிவு இல்லாத, பொது அறிவு இல்லாத அரசியல்வாதிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற பெயரில் உலா வரும் பிற்போக்கு வாதிகளின் கவனத்திற்கு, இன்று மார்ச் 6, 2026, அமெரிக்க கருவூலத் துறை US Treasury Department தற்காலிக 30 நாள் விலக்கு temporary 30-day waiver அளித்துள்ளது உண்மைதான். இது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான சமீபத்திய முக்கிய மாற்றம். ஆனால் ‘அனுமதி’ என்று பொய் சொல்லி இந்தியா அமெரிக்காவுக்கு அடிமையா என்று கேட்பவர்களின் தேச துரோகத்தை என்னவென்று சொல்வது? அமெரிக்கா அனுமதி அல்ல விலக்கு தான் அளித்துள்ளது. யாருக்கு இந்தியாவிற்கா? இல்லை, ரஷ்யாவிற்கு எந்த பொருளுக்கு இந்த விலக்கு? - மார்ச் 5, 2026 அல்லது அதற்கு முன் கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மட்டுமே விலக்கு crude oil & petroleum ப்ரோடுக்ட்ஸ். - இவை தற்போது கடலில் சிக்கித் தவிக்கும் / நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளவை. - புதிதாக ஏற்றும் எண்ணெய் மார்ச் 5ம் தேதிக்கு மேல் ஏற்றப்படும் எண்ணெய் இதில் அடங்காது. எவ்வளவு காலம் செல்லுபடியாகும்? ஏப்ரல் 4, 2026 அல்லது சில ஆதாரங்களில் ஏப்ரல் 3 வரை மட்டுமே — அதாவது சரியாக 30 நாட்கள். - ஏன் இப்போது இந்த விலக்கு? - ஈரான்-இஸ்ரேல்/மத்திய கிழக்கு போர் Iran war காரணமாக ஹார்முஸ் நீரிணை Strait of Hormuz போன்ற முக்கிய எண்ணெய் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன → உலக எண்ணெய் விநியோகம் தடைபடும் அச்சம். -உலக சந்தையில் இந்தியாவில் மட்டுமல்ல எண்ணெய் தொடர்ந்து பாய வேண்டும் என்பதற்காக "stopgap measure" தற்காலிக தீர்வு என்று அமெரிக்கா கூறியுள்ளது. இது இந்தியா மீதான அமெரிக்காவின் தடைக்கான விலக்கா? இல்லை. ரஷ்யாவின் மீதான அமெரிக்காவின் தடை மீதான விலக்கு. ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள் sanctions தொடர்கின்றன. இந்த ஒன்றை தவிர. இந்தியா ரஷ்யாவின் எண்ணெயை இறக்குமதி செய்கிறதா? ஆம் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. எங்கு விலை குறைவாக இருக்கிறதோ, எது பயனளிக்கிறதோ அங்கே இந்தியா வாங்கும். காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இதை "அமெரிக்காவின் மிரட்டல்" என்று விமர்சிக்கின்றன — "அமெரிக்க அனுமதி இல்லாமல் இந்தியாவால் ரஷ்ய எண்ணெய் வாங்க முடியாதா?" என்ற கேள்வியை எழுப்புகின்றனர். ஆனால் உண்மையில் இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்புக்காக ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை இது உலக நெருக்கடிக்கு ஏற்ப ரஷ்யாவிற்கான அமெரிக்காவின் தற்காலிக விலக்கு மட்டுமே. இது இந்தியாவிற்கு சாதகம். இந்தியாவிற்கு சாதகம் என்றால், ராகுலுக்கும், ஸ்டாலினுக்கும் பதற்றம் தொற்றிக் கொள்வது ஏன்? கம்யூனிஸ்டுகளுக்கு வயிறு எரிவது ஏன்? சில முற்போக்குகள் கதறுவது ஏன்? மல்லாக்க படுத்துக் கொண்டு காரித் துப்புவதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் உங்களை காரி துப்புவார்கள்
அமெரிக்காவின் ரஷ்ய எண்ணெய் மீதான இன்றைய ‘விலக்கு’ இந்திய மக்களுக்கு, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மாபெரும் வெற்றி நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.
இதை படிச்சிட்டு பார்வேர்ட் பண்ணியிருந்தா ....படிச்சப்ப என்னை மாதிரி கபகபன்னு சிரிச்சிருக்கனும்....
நாட்டில் வேலை இல்லாத பட்டதாரிகள் அதிகம்
அருமையான, உண்மை நிலவரத்தை தெளிவாக கூறும் விளக்கம்.
உன்னைப் போன்ற ஐந்தறிவு ஜீவன்களுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பில்லை பக்கோடா
கொஞ்சம் பேர் தான் இருக்கின்றனர்
ஹய் ஹய் ஹய்..
போர்க்காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் இருந்து இந்திய எண்ணை நிரப்பிக்கொண்டு கப்பல்கள் வெளியேறினால் அதன் மீது அமெரிக்கா தாக்காது. ஈரானும் தாக்காது. இஸ்ரேலும் தாக்காது. இதை பலர் இப்படி திரித்து கூறுவது கோமாளித்தனம். வெளியுறவு நடவடிக்கை என்பது செஸ் விளையாட்டு போல சிக்கலானது. இதை விமர்சிப்பது, செய்தியாக்குவது சிறுபிள்ளைத்தனம்.
Interesting how narratives are spun. Listen to the US energy secretary, hes clearly accepting that the USA reached out to India to help ease global oil prices by buying stored Russian oil.
But it is presented as if the US has allowed India to do it and the Congress ecosystem instantly jumped in to attack the Modi gvt.
நல்லவர்கள் ஆதரவு தருவார்கள்மேலும்
-
போர் காரணமாக விலை உயர்வு... சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை
-
திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
வீடின்றி தவிக்கிறேன்; விஜய் மனைவி சங்கீதா கோர்ட்டில் புதிய மனு
-
ஆல் தி பெஸ்ட் இந்தியா
-
ஈரான் போர் எதிரொலி; பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உச்சம்; ஒரு லிட்டர் ரூ.321
-
ஈரானில் 3 ஆயிரம் இலக்குகளில் துல்லிய தாக்குதல்; அமெரிக்க படை தகவல்