ஈரான் போர் எதிரொலி; பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உச்சம்; ஒரு லிட்டர் ரூ.321
இஸ்லாமாபாத்: ஈரான் போர் எதிரொலியாக, பாகிஸ்தானில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. பெட்ரோல் 55 ரூபாய் அதிகரித்து லிட்டர் ரூ.321க்கு விற்பனை ஆகிறது.
பாகிஸ்தானில் இதை சாதகமாக பயன்படுத்தி சில பெட்ரோல் பங்குகள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி பதுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல்வேறு நகரங்களில் மக்கள் அவதியடைந்தனர். அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கும் பெட்ரோல் பங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். அத்தகைய பங்குகளின் உரிமத்தை ரத்து செய்வதுடன், மூடி சீல் வைத்து சட்ட நடவடிக்கை தொடரப்படும் என எச்சரித்துள்ளார்.
விலை எவ்வளவு?
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு சந்தித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 55 ரூபாய் அதிகரித்து ஒரு பெட்ரோல் ரூ.321.17க்கு விற்பனை ஆகிறது. இது 17 சதவீதம் அதிகமாகும். அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 55 ரூபாய் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.335 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 20 சதவீதம் அதிகமாகும்.
இருப்பு இருக்கிறது!
இதற்கிடையே பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் 28 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீ சல் இருப்பு உள்ளது. இது தவிர 10 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பும், 15 நாட்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவும் கையிருப்பில் உள்ளது. எனவே மக்கள் பீதியடைந்து அதிகப்படியான எரிபொருட்களை வாங்கி சேமிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இங்குள்ள பக்கி மேதாவிகள் எங்கே??? எப்போதும் தாய் நாட்டை மட்டுமே குறை கூறி வாழும் ஜந்துக்கள்..
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை எவ்வளவு குறைவு பாருங்கள்..... மோடி அரசு என்ன செய்கிறது என்று சில வாருங்களுக்கு முன் கூவிய உபி கள் எங்கே......
பாகிஸ்தானியர் பலர் கள்ளத்தனமாக டிரக்குகளில் ஈரானுக்கு சென்று பெட்ரோலை கடத்தி வருவார்கள். அதுவும் நின்றுவிட்டது.
சத்தமில்லால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 868 இல் இருந்து 928 என்று உயர்த்தப்பட்டு இருக்கிறது....
ஆட்சிக்கு வந்தவுடன் சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம் வழங்கபடும் திமுகவின் 2021 ஆண்டு வாக்குறுதி ஆட்சி முடிய போகிறது இன்னும் வரவில்லை
பலநாடுகளில் வாழ்வாதாரத்தை சிதைக்கும் அமெரிக்காவை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும்.
கூலிக் கும்பல்களை மொத்தமாய் வளைத்துப் போட்டு அங்கு கொண்டு விடணும். விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வரணும் .
பாக்கிஸ்தான் நிலைமையை நினைச்சா சிரிப்பா வருது. ஒரு கிரிக்கெட் மேட்சிலும் 321 ரன் அடித்திருக்கமாட்டார்கள். ஆனால் பெட்ரோல் விலையில் அடிச்சிட்டாங்க.
ஆக்கம் கெட்டவர்கள் இந்த ஆப்கானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள். ஈரானிடமிருந்து அல்லது சவூதி இடமிருந்து பைப் போட்டு பெட்ரோலியம் நேரடியா கொண்டு வந்து விடலாம். அப்படியே அதை சாக்காய் வைத்து இந்தியாவிற்கும் பைப்பை போட்டு ஒரு வாடகை வசூல் செய்யலாம். அப்படியே அந்த பைப்பை மூலம் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நீட்டித்து அதற்கும் ஒரு கப்பம் வாங்கி கொள்ளலாம்.மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி