ஹரியானாவில் சோகம்; சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 7 பேர் பலி
சண்டிகர்: ஹரியானாவில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர்.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் ஒருவரை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிக்கிறது.
மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்,. இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சோட்டேலால், தீன்தயாள், ஷிவ்காந்த் மற்றும் இந்திரஜீத் என அடையாளம் காணப்பட்டனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
ஆழ்ந்த இரங்கல்மேலும்
-
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
போருக்கு மத்தியில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் 1,000 பேர்; மத்திய அரசு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
-
சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
-
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்