குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
நங்கவள்ளி:சேலம்
மாவட்டம் மேச்சேரி, எம்.காளிப்பட்டியில், புதுார், 4 ரோடு,
பனங்காடுமூர்த்தி ஆகிய பகுதிகளில், 250க்கும் மேற்-பட்ட
குடும்பத்தினர்
வசிக்கின்றனர். அப்பகுதியில் ஓராண்டுக்கு முன்
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதுவரை இணைப்பு
வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்-பட்ட மக்கள், நேற்று காலை, 10:45
மணிக்கு, காலி குடங்க-ளுடன், மேச்சேரி - நங்கவள்ளி நெடுஞ்சாலையில்,
குட்டப்பட்டி ரயில்வே கேட் மேம்பால முகப்பில், சாலை மறியலில்
ஈடுபட்-டனர்.
இதை அறிந்து வந்த, மேட்டூர் தாசில்தார் செந்தில்குமார்,
மேச்-சேரி பி.டி.ஓ., வாசுதேவபிரபு, நங்கவள்ளி போலீசார், பேச்சு
நடத்தினர். தொடர்ந்து, பா.ம.க.,வின் மேட்டூர் எம்.எல்.ஏ., சதா-சிவம்
வந்து பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்ப-வத்தால், 2 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குழாய் பதிக்கும் பணியை,
அதிகாரிகள் உடனே தொடங்கினர்.
மேலும்
-
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
போருக்கு மத்தியில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் 1,000 பேர்; மத்திய அரசு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
-
சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
-
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்