இன்று 188 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

சேலம்:தமிழகம் முழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்று காலை தொடங்குகிறது. அதற்கு சேலம் மாவட்டத்தில், மத்திய சிறைச்-சாலை உள்பட, 188 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில், 20,564 மாணவர், 20,223 மாணவியர் என, 40,787 பேர் எழுத உள்ளனர். இதில், 1,271 தனித்தேர்வர்கள், 774 மாற்றுத்திற-னாளி மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.அத்துடன், 193 முதன்மை கண்காணிப்பாளர்கள், 193 துறை அலுவலர்கள், 40 வழித்தட அலுவலர்கள், 224 பறக்கும் படை அலுவலர்கள், 3,757 அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மையங்கள், தடை செய்யப்-பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement