ஈரான் மீதான போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம்:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அஸ்தம்பட்டியில் உள்ள, சேலம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில் ஊழியர்கள், 'ஈரான் மீதான போரை நிறுத்த வேண்டும்' என அச்சடிக்கப்பட்ட அட்டைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலர் சுரேஷ், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க செயலர் ரமேஷ், வட்ட கிளை செயலர் ஸ்ரீபதி உள்ளிட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement