நாய் வளர்த்தவரை தாக்கிய ரவுடி உள்பட 3 பேர் சிக்கினர்

சேலம்:சேலம், அழகாபுரம் மிட்டாபுதுார், கான்வென்ட் சாலையை சேர்ந்தவர்

தேவபிரசாத், 30. வீட்டில் நாய் வளர்க்கிறார். நேற்று முன்தினம், அருகே வசிக்கும் லட்சுமி, 50, நடந்து வர, நாய் குரைத்ததோடு கடித்துள்ளது. லட்சுமி அழுதுள்ளார்.

இதை அறிந்த லட்சுமியின் மகன்கள் மணிகண்டன், சிவா, அவ-ரது நண்பர்கள் நவீன், முத்துராமன் ஆகியோர், தேவபிரசாத் வீட்-டுக்கு சென்று, 'நாயை விட்டு கடிக்க வைத்தாய்' எனக்கூறி தக-ராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லால் தேவபிரசாத்தை தாக்-கினர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரித்து, மிட்டாபுதுாரை சேர்ந்த ரவுடி சிவா, 24, முத்துராமன், 23, நவீன்குமார், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement