'போதை'யில் குருவி வேட்டை ஏட்டுக்கு எச்சரிக்கை

சேலம்,:சேலம், லைன்மேடு போலீஸ் குடியிருப்பில், நேற்று முன்தினம் இரவு, 2 பேர் மது போதையில் துப்பாக்கியுடன் வலம் வந்தனர்.


மக்கள் புகார்படி, அன்னதானப்பட்டி ரோந்து போலீசார், அங்கு சென்று, அந்த, 2 பேரை பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்துச்-சென்று
விசாரித்ததில், லைன்மேடு குடியிருப்பில் வசிக்கும் மோகன், 45, அவரது நண்பர் ஆனந்த் என்பதும், மோகன் காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிவதும், இருவரும் மது அருந்தி இருந்ததும் தெரிந்தது.

மேலும் நேற்று காலை, மோகனிடம் விசாரித்தபோது, குருவி சுடுவதற்கு ஏர்கன் எடுத்து வந்ததாக தெரிவித்தார்.


ஏர் கன்னை பறிமுதல் செய்து, இருவரையும் எச்சரித்து அனுப்-பினர். இருப்பினும் இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரி-யவந்துள்ளதால், தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement