மெக்கானிக் மர்மச்சாவு

சிவகங்கை: திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் 42. இவர் சிவகங்கை சுண்ணாம்புகாளவாசல் பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை நடத்திவந்தார். நேற்று முன்தினம் திருப்புவனத்திலிருந்து சிவகங்கை வந்தவர் வீடு திரும்பவில்லை.

கூத்தாண்டத்தில் உள்ள தனியார் கிணற்றில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து எப்படி இறந்தார் என விசாரிக்கின்றனர்.

Advertisement