வாலிபரை தாக்கிய இருவர் கைது

மறைமலை நகர்: வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ராஜேஷ், 18. நேற்று முன்தினம் காட்டாங்கொளத்துார் பெருமாள் கோவில் தெருவில் ராஜேஷ் நடந்து சென்ற போது அவரை வழி மறித்த இருவர் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ராஜேஷை தாக்கிய இருவரும் கிழக்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த பிரவீன், 23. அவரது நண்பரான ஹரிஷ், 19. என்பது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement