மூதாட்டியிடம் 3 சவரன் பறிப்பு

மறைமலை நகர்: நடந்து சென்ற மூதாட்டியிடம் ௩ சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

மறைமலை நகர் அடுத்த பேரமனுார் பகுதியை சேர்ந்தவர் தேவகி, 76. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டின் அருகில் பேரமனுார் - சட்ட மங்கலம் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், தேவகி கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து தேவகி மகன் இளங்கோவன் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement