கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
நமது நிருபர்
கோவை புதூர் 4வது போலீஸ் பட்டாலியன் படைப்பிரிவில் பணிபுரிந்த பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி செந்தில் குமார் கைது செய்யப்பட்டார்.
கோவை புதூரில் சிறப்பு போலீஸ் படை பிரிவு செயல்படுகிறது. கமாண்டன்ட் ஆக எஸ்.பி., ரேங்க் அதிகாரி செந்தில்குமார் பதவி வகித்தார். சமீபத்தில் பயிற்சிக்கு வந்த ஒரு பெண் போலீசிடம் தகாத முறையில் செந்தில்குமார் நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பெண் போலீஸ், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் விசாரணைக்குழுவிடம் புகார் அளித்தார்.
கமாண்டண்ட் செந்தில்குமார் மீது பெண் போலீஸ் கூறிய புகார் படி தமிழக அரசு, அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. புகார் மீதான விசாரணை முடியும் வரை சென்னையில் உள்ள தமிழக சிறப்பு போலீஸ் படை தலைமையகத்தில் செந்தில்குமார் தங்கியிருக்க வேண்டும்; அரசு அனுமதி பெறாமல் வெளியூர்களுக்கோ வெளிநாட்டுக்கோ செல்லக்கூடாது எனவும் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டு இருந்தார்.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த எஸ்.பி. செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் புகாரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்புமணி அறிக்கை
இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, ''வேலியே பயிரை மேய்ந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? பெண்கள் உள்ளிட்ட மக்களைக் காக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது'' என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், ''தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டன. இதற்கு காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்படாததும் தான். இதற்கெல்லாம் காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்'' என அன்புமணி கூறியுள்ளார்.
@block_P@
இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் கோவை புதூரில் உள்ள, தமிழக சிறப்புக் காவல்படை அதிகாரி செந்தில்குமார், பெண்காவலரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதால், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழகம் முழுவதும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலில், பெண் போலீஸ்யே
பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்போதும், போலீஸ் அதிகாரியே இதனைச் செய்திருப்பதும், திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை அவலநிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.
திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை. பெண் போலீசுக்கு, போலீஸ் ஸ்டேஷனிலேயே பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது, கையாலாகாத திமுக ஆட்சியில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.block_P
@block_G@
இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: திறனற்ற திமுக ஆட்சியில் காமுகர்களாக மாறிய போலீசார். கோவையில் போலீஸ் ஸ்டேஷன் அலுவலக அறையில் வைத்தே பெண் போலீசாரை மதுக்கரை சிறப்பு காவல்துறை கமாண்டண்ட் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்று போலியாக முழங்கும் திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையால் தெருதோறும் காமுகர்கள் பெருகி வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் காவல் அதிகாரிகளே காமுகர்களாக மாறிவருவது பெண்கள் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்குகிறது.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை. போலீஸ் ஸ்டேஷனில் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தின் வரலாற்றில் இப்படி ஒரு கொடூரத்தை இதுவரை யாரும் பார்த்ததும் இல்லை. இனி இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சி தொடரப்போவதுமில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
block_G
அந்த போலீஸ் உயர் அதிகாரிக்கு தெரியும், அவர் ஏதாவது தவறுசெய்து மாட்டிக்கொண்டால், திமுக அரசு காப்பாற்றும் என்று. அந்த தைரியத்தில்தான் இன்று இவர் மட்டுமல்ல, இவரைப்போன்று பல உயர் அதிகாரிகள் தவறுமேல் தவறு செய்கின்றனர்.
Kaaval துறையை கையில் வைத்திருப்பவர் ராஜினாமா செய்ய வேண்டும் . நேற்று தான் ஒரு உயர் அதிகாரியும் உடன் pirappu மானவர் தமிழகத்தில் குற்றம் குறைவு என்று பாராட்டு பத்திரம் வழங்கினார் இன்று இந்த கொடுமை . கையாலாகாத அரசு
எந்தத் தவறு செய்தாலும் தப்பி விடலாம் எனும் நம்பிக்கை வேறூன்றி விட்டது.அதன் விளைவே இது.அரசியல் வியாதிகள் ரௌடிகளை விடிவிக்கச் சொல்லி நிர்ப்பந்தம் செய்வதால் காவல் துறையும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. மானாமதுரை சம்பவங்கள் எடுத்துக்காட்டு. காவல் துறையில் பணம் தான் அதிகம்.விளையாடுகிறது.
நீ ஒன்னும் கவலைப்படாதே செந்தில்குமார். உனக்கு விரைவில் பதவி உயர்வுடன், இடமாறுதல் என்ற கடுமையான தண்டனை கொடுப்பார்கள்.
மெழுகுவர்த்தி அக்கா வந்துட்டு attendance போட்டுட்டு போவாங்க. கை பை புகழ் அக்கா, சுப்ரியா அக்கா ஜாடி மணி வந்து கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்
மானங்கெட்டவர்கள் ஆட்சியில் கேடு கேட்டவர்களுக்கு கொண்டாட்டம் தானே ....
பெயரை படித்தவுடன் அண்டாவோ என நினைத்து பதறி போய்விட்டேன்
கடும் நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள், இந்த செய்தியை பல ஊடகங்களுக்கும் விளம்பரம் செய்தாவது வருங்கால போலீஸ் தலைமுறை ஒழுக்கமாகவும் வீரத்துடனும் தீரத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவிக்கலாம். இதை பார்த்தாவது ஊழலிலும் பொய்களிலும் திளைக்கும் மினாரிட்டி பொய் ஜே பி அரசு கொள்ளையர்களையும், கொலைகாரர்களையும் பதுக்கல்காரர்களையும் இனியாவது கட்சியில் சேர்க்காமல், கட்சியை சாக்கடை ஆக்காமல் பார்த்துக்கொள்ளனும்.
ஒரு எஸ்பி என்றும் பாராமல், உடனடியாக கைது செய்ய உத்தரவிட்ட திமுக ஆட்சி பாராட்டத்தக்கது. இதே சம்பவம் மற்ற கட்சிகள் ஆட்சியில் நடந்தால் அதை அப்படியே மூடி மறைத்திருப்பார்கள்.மேலும்
-
பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி முறிவு? புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சிக்கல்
-
ஆப்கன் மருத்துவமனை மீது பாக் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு
-
ஒடிஷா அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் பலி!: காப்பாற்ற முயன்ற 11 ஊழியர்கள் காயம்
-
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பெறக்கூடாது: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
-
2 இட்லி ரூ.40, அசைவ சாப்பாடு ரூ.350: கமிஷன் லிஸ்ட் பார்த்து கட்சிகள் பதற்றம்
-
உள்ளூர் வாகனங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு